அனைத்து அரசு மதுக்கடைகளில் பார் வசதி

Subscribe to Oneindia Tamil

கோவை:

அனைத்து அரசு மதுக்கடைகளில் பார் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டாஸ்மார்க் நிர்வாக ஆணையர் அய்யர் அரசு மதுக்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் விற்பனை குறித்து மாவட்டமேலாளர்கள், கலால்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பார் வசதிஇல்லாததால் பீர் விற்பனை குறைந்திருப்பது சுட்டிக் காட்டப்பட்டது.

இதனையடுத்து, தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டவுடன் உடனடியாக பார் திறக்க அய்யர்உத்தரவிட்டார். பார் நடத்தத் தேவையான குளிர்சாதனப்பெட்டி, மேஜை, நாற்காலிகளை முதுநிலை மண்டலமேலாளருடன் ஆலோசனை செய்து மாவட்ட மேலாளர்கள் வாங்கவேண்டும்.

பாரை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நொறுக்குத் தீனிகளை விற்பனைசெய்ய மாவட்ட மேலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தனியார் போலி மதுக்கடைகளை அகற்றும் பணியை கலால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும், மதுக்கடைகளில் விற்பனையான சரக்குகள் மற்றும் இருப்பு குறித்து கணக்கெடுக்க 15கடைகளுக்கு ஒரு மேற்பார்வையாளரை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதுவரை கோவை மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 110 கோடி ரூபாய்க்கு மது விற்பனைசெய்யப்பட்டதையடுத்து. கோவை மேலாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+