ஜெயலலிதாவை சந்திக்க வருகிறார் வெங்கையா
சென்னை:
அதிமுகவும் பா.ஜ.கவும் கூட்டணி அமைப்பது நிச்சயமாகிவிட்டது. அத்வானியின் தொலைபேசிப் பேச்சைத்தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு வரும் 28ம் தேதிசென்னைவருகிறார்.
அப்போது கூட்டணி, இடங்கள் பகிர்வு குறித்து இருவரும் விரிவாக பேச்சு நடத்தவுள்ளனர்.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி படு ஜரூராக போய்க் கொண்டுள்ளது.
அதிமுகவின் நிலைதான் குழப்பமாக இருந்தது. பா.ஜ.கவின் நிலையோ பரிதாபமாக இருந்தது.
இந் நிலையில் நேற்று துணைப் பிரதமர் அத்வானி, ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசி முக்கியஉறுதிமொழிகள் சிலவற்றை தந்ததையடுத்து கூட்டணி அமைப்பது உறுதியானது.
இந் நிலையில் வெங்கையா நாயுடு சென்னை வந்து ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளார்.
முன்னதாக நேற்று மாலை ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு வெங்கையா நாயுடு பேக்ஸ் அனுப்பினார்.அதை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா வெங்கையாவை சந்திக்க ஒப்புக் கொண்டதாக அதிமுக செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை கூட்டணி பேச வந்த பிரமோத் மகாஜனை போயஸ் கார்டனில் பல மணி நேரம் காக்க வைத்து,அனுப்பினார் ஜெயலலிதா. நாயுடுவுக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை.