தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார் நரேந்திர மோடி
சென்னை:
மதக் கலவர புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.
இத் தகவைல தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க. தேர்தல் குழுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக குஜராத் முதல்வர் மோடி பிரசாரம் செய்ய வரவுள்ளார். கோவை,நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்வார்.
ஜனவரி 23ம் தேதி முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை அவர் யாத்திரை நடத்தி பிரசாரம் செய்யவுள்ளார். அதேபோலமத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஷோரி போன்றவர்களும் பிரசாரம் செய்ய தமிழகம் வருகிறார்கள்.
திமுக அமைத்துள்ள கூட்டணி எங்களுக்கு ஒரு மிரட்டலே அல்ல. வெறுமனே பல கட்சிகள் ஒன்றாக சேர்வதால்மட்டும் அவர்கள் பலமானவர்கள் என்று கூறி விட முடியாது.
திமுகவுக்கு எதிராக மிகப் பலமான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. நிச்சயமாக தனித்துபோட்டியில்லை. கூட்டணி அமைத்தோ போட்டியிடுவோம் என்றார்.
அத்வானியின் சிஷ்யரான மோடி ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் வென்று மீண்டும்முதல்வராக மோடி பதவியேற்றபோது சிறப்பு விமானத்தில் குஜராத்துக்குப் பறந்து போய் அந்த நிகழ்ச்சியில்புரட்சித் தலைவி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.