நீதித்துறை: பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிப்பு-பாமக
திண்டிவனம்:
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு போதிய முக்கியத்துவம்தரப்படவில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது காலியாக உள்ள 9 நீதிபதி பதவிகளுக்கும் புதிய நீதிபதிகளை நியமிக்கதலைமை நீதிபதி பரிந்துரையை அனுப்பியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் முன்னேறியவகுப்பைச் சேர்ந்தவர்கள்.
அதில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. இதை எதிர்த்துபா.ம.க. இடம் பெற்றுள்ள சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வரும் 29ம் தேதி உயர் நீதிமன்றத்தின்முன் ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
துணைப் பிரதமர் அத்வானிக்கு செலக்டிவ் அம்னீசியா இருப்பதாக ஜெயலலிதா முன்பு கூறினார். இப்போது அதேஅத்வானியுடன் கூட்டணிப் பேச்சு நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
எனது மகன் அன்புமணி தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் வற்புறுத்துகினறனர்.ஆனால், அவரது விருப்பம் தெரியவில்லை. அவர் விருப்பம் தெரிவித்தால், நிர்வாகிகளுடன் பேசிமுடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications