பெரியகுளத்தில் சசிகலா போட்டி?: தொகுதிக்கு சிறப்பு சலுகைகள்
தேனி:
வரும் பிப்ரவரி 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தேனி செல்கிறார்.
கண்டமனூர் அருகே உள்ள ராஜேந்திரா நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பல கோடிமதிப்புள்ள அரசு நலத் திட்ட உதவிகளைத் துவக்கி வைப்பதோடு, தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பையும்அப்போது வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம், திண்டுக்கல் அல்லது பெரியகுளம் தொகுதியில் சசிகலாபோட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பெரியகுளத்துக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதாவின் வருகையும் தேனி மாவட்டத்துக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கவுள்ளதும்அதிமுகவினடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தத் தொகுதியில் இருந்து சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் இரண்டு முறை எம்.பியாகத் தேர்வுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்குலத்தோர் மக்கள் மிக அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதி சசிகலாவுக்குமிகவும் பாதுகாப்பானது என ஜெயலலிதா கருதுவதாகத் தெரிகிறது.
சசிகலா போட்டியிடுவார் என்று பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், ஜெயலலிதாவே கூட போட்டியிடக் கூடும் என்றும்சில அதிமுகவினர் கூறுகின்றனர்.
இதற்கிடையே ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு வசதியாக மயிலாடும்பாறை பகுதியில்ஹெலிபேட் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கும் கூட நேற்று பூமி பூஜை நடத்தப்பட்டது.
இதேபோல, ராஜேந்திர நகரில் முதல்வர் பேசவுள்ள மேடைக்கும் கூட பூமி பூஜை நடத்தினர் அதிகாரிகள்.