ஸ்ரீரங்கத்தில் வறுமை காரணமாக குடும்பமே தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
திருவாணைக்கால் ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வந்தவர் வேலு (50 ). இவர் பிளாஸ்டிக் பொருள்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.ஆனால், அந்தத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வெளியில் கடன் வாங்கினார். பணத்தைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இவரது குடும்பம் திணறியது. கடன் தொல்லை வேறுநெருக்கியதால் வெறுத்துப் போன வேலு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
வேலு, அவரது மனைவி, மகள் மற்றும் மகன் ஆகியோர் நேற்றிரவு விஷம் குடித்து இறந்தனர். இன்று காலை வெகு நேரம்வீட்டின் கதவு திறக்கப்படாததால், அண்டை வீட்டினர் உள்ளே எட்டிப் பார்த்தபோது நான்கு பேரும் மடிந்து கிடந்தனர்.












Click it and Unblock the Notifications