8 மதிமுகவினரின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
டெல்லி:
மதிமுகவினர் 8 பேருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுடன் சிறையில் இருந்த இந்த 8 பேருக்கும்கடந்த 12ம் தேதி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந் நிலையில் இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.பொடா சடத்தின் 21வது பிரிவின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப்பேசுவதும், பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்வதும் குற்றம் என இந்த மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.
மேலும், உயர் நீதிமன்றம் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளாமல் ஜாமீன் கொடுத்துள்ளதாகவும், வெளியேவந்துவிட்ட இவர்கள் சாட்சியங்களைக் கலைத்து விடுவார்கள் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாமீன் கோரி வைகோ தாக்கல் செய்துள்ள மனுவின் மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்குபொடா சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது. நேற்று இந்த நீதிமன்றத்தில் சுமார் 1 மணி நேரம் தனக்காகவைகோ வாதாடினார்.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் வாதாட, அட்வேகட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் வரும் 27ம் தேதி தான்நீதிமன்றத்தில் ஆஜராக முடியும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வைகோவின் மனு மீதான விசாரணை 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் வைகோஉள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு விசாரணை நாளை (இன்று) தொடர்ந்து நடக்கும் எனவும்நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications