ஓலத்தில் ஸ்ரீரங்கம்: 20 ஆண்டுகளில் நடக்காத கோரம்
திருச்சி:
ஸ்ரீரங்கத்தில் இன்று காலை நடந்த கோரமான தீ விபத்தில் மணமகன் உள்ளிட்ட 50 பேர் கருகி பலியானது திருச்சிநகரையே உலுக்கி விட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற ஒரு மகா கோரமான விபத்தை திருச்சி நகரம் கண்டதில்லை.
இந்த விபத்தில் கல்யாண மண்டபமே கருகி உருக்குலைந்துவிட்டது. எங்கும் எரிந்து போன உடல்களாய் சிதறிக்கிடக்க, மண மண்டபம் பிண மண்டபமாக மாறிப் போனது.
மாப்பிள்ளையோடு சேர்ந்து இறந்த அத்தனை பேரும் ஸ்ரீ ரங்கத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் ஸ்ரீரங்கம் முழுவதும்எங்கு நோக்கினும் ஓலக் குரல்களாக உள்ளன. கிட்டத்தட்ட ஊரின் 50 குடும்பங்கள் தங்கள் உறவுகளைஇழந்துள்ளன.
தீயில் கருகி காயமடைந்து துடித்தவர்களை பொதுமக்களும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக்கொண்டு செல்ல உதவினர். தங்களது வீட்டில் நடந்து விட்ட துயரத்தைப் போல கருதி பொதுமக்கள் அங்குமிங்கும்ஓடி ஓடி உதவினர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவாசகன், ஐ.ஜி. ஜார்ஜ், டி.ஐ.ஜி. சுனில் குமார் ஆகியோர் சம்பவம் நடந்தஇடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை துதப்படுத்தினர்.
திருச்சி நகல் கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு கோரமான விபத்து நடந்ததில்லை என்று கூறப்படுகிறது.