ஜப்பான் தலைமையில் நிதியுதவி மாநாடு: புலிகள் புறக்கணிப்பு
கொழும்பு:
கொழும்பில் இன்று நடக்கும் ஜப்பான் நிதியுதவி மாநாட்டை விடுதலைப் புலிகள் இயக்கம் புறக்கணிக்கிறது.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அதிரடி செயல்களால் அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கிவிட்டதோடு, பிரதமர்ரணிலின் ஆட்சியும் கவிழக் கூடிய சூழல் எழுந்துள்ளது. இதனால் மீண்டும் போர் தொடங்கவும் வாய்ப்பிருப்பதாகபுலிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இந் நிலையில் வட-கிழக்கு இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக நிதி திரட்டுவது குறித்த சர்வதேசமாநாட்டுக்கு இன்று ஜப்பான் ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால், இலங்கையில் இப்போது நிலவும் அசாதாரணமான சூழலில், இந்த மாநாட்டில் நாங்கள் கலந்துகொண்டால், தமிழர்களின் மனதில் எங்கள் இயக்கம் குறித்து தவறான தகவல் போய் படிந்துவிடும் என்று கூறிமாநாட்டை புறக்கணப்பதாக புலிகள் அறிவித்துவிட்டனர்.
கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்தித்து மாநாட்டுக்கு அழைப்பு விடுத்த ஜப்பானிய பிரதிநிதியிடம், புலிகளின்அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் இதனைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications