நெடுமாறன் ஜாமீனை எதிர்த்த தமிழக அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனு இன்று நிராகரிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, தமிழக அரசு நெடுமாறனைகடந்த வருடம் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில்நெடுமாறனுக்கு ஜாமீன் கிடைத்தது.
இந்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதை இன்றுவிசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதனால் அவரது ஜாமீன் விடுதலை உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications