தமிழகத்தின் ஆட்சேபணைகளை நிராகரித்தது பொடா ஆய்வுக் குழு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளை, பொடாமறுஆய்வுக் குழு விசாரிப்பதற்கு தமிழக அரசு தெரிவித்திருந்த பூர்வாங்க ஆட்சேபணைகளை அந்தக் குழு இன்றுநிராகரித்தது.
நீதிபதி சஹாரியா தலைமையிலான 3 பேர் கொண்ட பொடா மறுஆய்வுக் குழு இன்று கூடியது. அப்போது,நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்குகளை பொடா குழு விசாரிக்க முடியாது என தமிழக அரசுதெரிவித்திருந்த பூர்வாங்க ஆட்சேபணைகளை நிராகரிப்பதாக நீதிபதி சஹாரியா அறிவித்தார்.
மேலும், பொடா சட்டம் தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வந்த புகார்களுக்கு விளக்கமளிக்க தமிழகஅரசுக்கு போதுமான அவகாசம் அளிக்கப்பட்டது, ஆனால் அரசுதான் அதற்கு சரியான பதிலை பதிவுசெய்யவில்லை என்றும் நீதிபதி கூறினார்.
வைகோ மற்றும் கோபால் மீதான பொடா வழக்குகள் குறித்து அடுத்த மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் விசாரணைநடத்தப்படும். தேவைப்பட்டால் 6ம் தேதியும் விசாரணை நீட்டிக்கப்படும் என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந் நிலையில், பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதானவிசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.