ஜெ. அதிர்ச்சி-: நிவாரண உதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பேர் பலியானது குறித்து முதல்வர்ஜெயலலிதா ஆழ்ந்த அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார். பலியானோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில்மணமகன் உள்ளிட்டோர் பலியானது குறித்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதல்களையும்தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீவிபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விசாரித்து, விரிவான அறிக்கைதருமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வேளாண்மைத் துறை அமைச்சர் அண்ணாவி உடனடியாக திருச்சி சென்று இறந்தவர்களின் குடும்பங்களுக்குஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000மும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000மும்,லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6,000ம் வழங்கவும் மாவட்ட ஆட்சித் தலைவருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+