ஜெயலலிதாவுக்கு எதிராக மிச்சமுள்ள வழக்குகள்
சென்னை:
இதுவரை தனக்கு எதிரான 6 வழக்குகளை முதல்வர் ஜெயலலிதா வென்றுள்ளார். அவர் மீது மேலும் இரு வழக்குகள் நிலுவையில்உள்ளன.
ஆஸ்திரேலியாவில் இருந்து மின் வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்தது தொடர்பான ஊழல், கொடைக்கானலில் பிளசன்ட்ஸ்டே ஹோட்டலுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய ஊழல், பஞ்சாயத்துகளுக்கு பிபிஎல் நிறுவனத்திடம் இருந்து கலர்டிவிக்கள் வாங்கிய ஊழல், டான்சி நிலத்தை சசிகலாவோடு சேர்த்து வாங்கிய ஊழல், ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் ஆகியவழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவை தவிர வருமானத்துக்கும் அதிகமாக ரூ. 65 கோடி சொத்து சேர்த்த ஊழல் வழக்கு, லண்டனில் ஹோட்டல் வாங்கிய ஊழல்வழக்கு, வெளிநாட்டில் இருந்து 3 லட்சம் டாலர் நன்கொடை வாங்கிய வழக்கு, மீனா அட்வர்டைசிங் வழக்கு, கிரானைட் ஊழல்ஆகியவை இப்போது நிலுவையில் உள்ளன. இதில் நனகொடை வழக்கை சிபிஐ பதிவு செய்தது.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்காக பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
கலர் டிவி ஊழல் வழககிலும் நிலக்கரி ஊழல் வழக்கிலும் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகி நிலுவையில் உள்ளன. பிளசன்ட் ஸ்டே ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலையானதைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.