பிப்ரவரி முதல் வாரத்தில் மக்களவை கலைப்பு: பிரமோத் மகாஜன்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்:
அடுத்த மாதம் முதல் வாரத்தில் மக்களவை கலைக்கப்படும் என்று பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன்கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இது முடிந்த பிறகு பிப்ரவரி முதல்வாரத்தில் மக்களவை கலைக்கப்படும். விரைவில் தேர்தலை நடத்தி அடுத்த மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்ஆணையம் ஆவண செய்யும் என நம்புகிறோம்.
மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா, சிக்கிம், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலையும்நடத்த வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. எங்களின் இந்த நியாயமான கோரிக்யைை தேர்தல் ஆணையம்ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications