கருணாநிதியை சந்திக்க மன்மோகன் சிங், கமல்நாத் வருகை
சென்னை:
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கருணாநிதியுடன்விவாதிக்க காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மன்மோகன் சிங் மற்றும் கமல்நாத் ஆகியோர் இன்று சென்னைவருகிறார்கள்.
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 6 எம்.பி. சீட்கள்கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதேபோல,இந்திய தேசியலீக் கட்சிக்கும் ஒரு இடம் கொடுக்கப்படவுள்ளது. இதுதவிர மற்ற முக்கிய கட்சியானகாங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம், மதிமுகவுக்கு எத்தனை இடம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதிகளாக மன்மோகன் சிங், கமல்நாத் ஆகிய இருவரும் இன்று பிற்பகல்சென்னை வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதியுடன் இருவரும் பேசவுள்ளனர். அப்போது தொகுதிப் பங்கீடுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இன்று மாலையே கூட காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள்என்பது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 13 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பேச்சுவார்த்தையின்போது புதுச்சேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று மன்மோகன் சிங்,கமல்நாத் ஆகியோர் கருணாநிதியை வற்புறுத்துவார்கள் என்றும் தெரிகிறது.
புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8 முறை வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போது இந்தத் தொகுதியைபா.ம.கவுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இத்தொகுதியில் இதுவரை பா.ம.க. ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.கடந்த முறை போட்டியிட்டபோது படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications