தேர்தல் சலுகைகள்: ரூ.10.71 கோடியில் புதிய நீர்ப்பாசன திட்டங்களை அறிவிக்கும் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தூத்துக்குடி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 10.71 கோடி ருபாய் மதிப்பிலான 10 புதிய நீர்ப்பாசனதிட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில்,

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நீர்வளத்தைப் பெருக்க தூத்துக்குடி, தருமபுரி, மதுரை,சிவகங்கை, நெல்லை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ரூ.10.71கோடி மதிப்பில் 10 புதிய நீர்ப்பாசன திட்டங்களை அரசு மேற்கொள்ளவுள்ளது.

மதுரை பேரையூர் வட்டத்தில் மல்லாபுரம் கிராமத்தில் ஐயனார்கோயில் ஓடையின் குறுக்கே ரூ.3.54 கோடி மதிப்பில்புதிய ஏரி அமைக்கப்படும். திருவள்ளூர் பொன்னேரி வட்டம் கொசஸ்தலை ஆற்றில் ரூ. 2.53 கோடியில் ஆற்றுப்படுகை புதுப்பிக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கப்பல்வாடி அணைக்கட்டில் ரூ.85 லட்சம் மதிப்பில் கால்வாய்கள் ஆழப்படுத்தப்படும்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே சின்னூர் அருகே ரூ.71 லட்சம் மதிப்பில் புதிய ஏரிஅமைக்கப்படும்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டத்திலுள்ள 18 ஏரிகளுக்கு நீர் வழங்கும் வகையில் பொதியம்பள்ளம்அணை ரூ.86 லட்சத்தில் சீரமைக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் தலவாரம்பூண்டி கிராமத்தில் ரூ.56 லட்சத்தில்அணை கட்டப்படும்.

சிவகங்கை தேவகோட்டையில் உள்ள சருகனி ஆற்றின் குறுக்கே ரூ.50 லட்சம் மதிப்பில் அணை கட்டப்படும்.திருநெல்வேலி ராஜபதி சிற்றூர் அருகே ரூ.47 லட்சம் மதிப்பில் புதிய ஏரியும், கோவில்பட்டி துறையூர் அருகே ரூ.29 லட்சத்தில் புதிய ஏரியும் அமைக்கப்படும். இந்த திட்டங்களினால் 4462 ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+