பஸ் அதிபர் வீட்டில் ரூ. 1 கோடி நகை, பணம் கொள்ளை
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பஸ் அதிபரின் வீட்டில் புகுந்த 10 பேர் கொண்ட முகமூடிக் கும்பல் பஸ்அதிபரின் மனைவியைத் தாக்கி விட்டு வீட்டிலிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நகை, பணம், செல்போன்கள்,பட்டுச்சேலைகளை திருடிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் பஸ் அதிபர். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை 2 மாருதிவேன்களில் 10 பேர் கொண்ட முகமூடிக் கும்பல் வந்தது. வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தஅக்கும்பல், வீட்டில் இருந்த பீரோவை திறக்க முயற்சித்தது.
சப்தம் கேட்டு அங்கு வந்த பஸ் அதிபரின் மனைவி சந்தான லட்சுமி, திருடர்களைப் பார்த்து சப்தம் போட்டுள்ளார்.இதனால் அக்கும்பல் சந்தான லட்சுமியை பலமாக தாக்கியுள்ளது.இதில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அக்கும்பல் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ. 10 லட்சம் ரொக்கம், 3 செல்போன்கள், பட்டுச்சேலைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பியது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications