ஸ்ரீரங்கம்: திருமண மண்டப பலி 57 ஆனது

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீவிபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்திலுள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் நடந்த மிகப் பெரிய தீ விபத்தில் மணமகன்குருராஜன் உள்ளிட்ட 56 பேர் பலியானார்கள். இதில் காயமடைந்த பலர் அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 57 ஆகஉயர்ந்தது. மணமகள் ஜெயஸ்ரீ தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரதுகுடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையே, திருச்சியில் உள்ள கல்யாண மண்டபங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாகசெய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்து வருவதாக திருச்சி மாநகராட்சி மேயர் சாருபாலாதொண்டமான் தெரிவித்துள்ளார். அப்படிச் செய்யப்படாத கல்யாண மண்டபங்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+