பாண்டிச்சேரி: காங்கிரசிலிருந்து கண்ணன் விலகல்
பாண்டிச்சேரி:
புதுவை காங்கிரஸ் மூத்த தலைவர் கண்ணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று விலகினார்.
இவர் இதற்கு முன்பு ஒரு தடவை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, புதுச் சேரி மக்கள் கட்சி என்ற தனிக்கட்சிஆரம்பித்தார். கடந்த ஆண்டுதான் சோனியா தலைமையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
இப்போது, பாண்டிச்சேரி தொகுதி பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அம்மாநில காங்கிரசுக்குள் பெரும்அதிருப்தி நிலவுகிறது. இந் நிலையில் கண்ணன் கட்யிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்கு அதிமுகவின் ஆதரவு கிடைக்கும் என்று தெரிகிறது. அதிமுகவுடன் இணைந்து இத் தொகுதியில்போட்டியிட முனையக்கூடும். ஆனால் நிருபர்களிடம் கண்ணன் பேசுகையில்,
பொது சேவையில் தீவிர பங்காற்றும் பொருட்டு கட்சியிலிருந்து விலகியுள்ளேன். வேறு கட்சிகளில் சேரும்எண்ணம் இல்லை.
புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கும் எண்ணமும் இல்லை. அது முடிந்தபோன விஷயமாகும்.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கும், கட்சியிலிருந்து விலகியதால் புதுவையில்காங்கிரஸ் கட்சி பலவீனமடையுமா என்ற கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications