For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 தொகுதிகள் கேட்கும் மதிமுக: கருணாநிதியுடன் நாளை மீண்டும் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக தலைவர்கள் நாளை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைநடத்த உள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் சிவகாசி, பழனி, திருச்செங்கோடு, பொள்ளாச்சி, திண்டிவனம் ஆகிய 5தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டது. இதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த முறையும் 5 தொகுதிகள் வேண்டும் என அக்கட்சி கோரி வருகிறது. ஆனால் 4 தொகுதிகள்தான் தர முடியும்என்று திமுக கூறுவதாகத் தெரிகிறது. இதனால் சில தினங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

எப்படியும் இறுதியில் கூடுதலாக ஒரு தொகுதியை திமுக ஒதுக்கும் என்று மதிமுக தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த முறை மதிமுக போட்டியிட்ட திண்டிவனம் தொகுதி இப்போது பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்குப்பதிலாக கடலூர் அல்லது வந்தவாசி தொகுதியை மதிமுக கோருகிறது.

தொகுதிகள் குறித்து முடிவு செய்யும் பொருட்டு மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் நாளை வேலூர் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்து ஆலோசனைசெய்கிறார்கள்.

அப்போது எடுக்கப்படும் முடிவுகளையொட்டி, நாளை மாலை கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.எப்படியும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் ஒரிரு தினங்களில் கையெழுத்து ஆகிவிடும் என்று மதிமுக தரப்பில்கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X