புதிய நீதி கட்சிக்கு 3 தொகுதிகள் வேண்டுமாம்!
பாண்டிச்சேரி:
நாடாளுமன்றத் தேர்தலில்3 தொகுதிகளை ஒதுக்கும் எந்தக் கூட்டணியிலும் தாங்கள் சேரத் தயார் என்று புதிய நீதிக்கட்சி கூறியுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதித்த ஜாதிக் கட்சிதான் புதிய நீதிக் கட்சி. அந்தத் தேர்தலில் படுதோல்விஅடைந்ததற்குப் பிறகு அட்ரஸே இல்லாமல் போன புதிய நீதிக் கட்சி தற்போது மீண்டும் தேர்தலையொட்டிபுத்துணர்ச்சி பெற்று களம் இறங்கியுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனியப்பன் பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களதுகட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார். எங்களை எந்தக் கூட்டணி அழைத்தாலும் 3 தொகுதிகள்தந்தால் அக்கூட்டணியில் சேர நாங்கள் தயார்.
எங்களது கட்சிக்கு 10சதவீத ஓட்டு வங்கி உள்ளது. வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக நாங்கள் விளங்குகிறோம்.எனவே எங்களை சாதாரணமாக நினைக்காமல், வெற்றிக்கு உதவும் அரசியல் சக்தியாக மற்ற அரசியல் கட்சிகள்பார்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications