For Daily Alerts
Just In
29ம் தேதி சோனியா-கருணாநிதி சந்திப்பு
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 29ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனையொட்டி திமுகதுணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சர்மறைந்த முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சென்று சோனியா காந்தியைச் சந்தித்துப்பேசினர்.
நேற்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் மன்மோகன்சிங், கமல்நாத் ஆகியோர் சென்னை வந்து கருணாநிதியைச்சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.
இந் நிலையில் சோனியா காந்தி வரும் 29ம் தேதி சென்னை வருகிறார். அப்போது அவர் கருணாநிதியைச் சந்தித்துபேசவிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது அப்போது முடிவு செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, January 26, 2004, 5:30 [IST]