தாயாரின் நினைவு தினம்: திருக்குவளை புறப்பட்டார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 40வது ஆண்டு மறைவு தினத்தையொட்டி திமுக தலைவர் கருணாநிதிஇன்று தனது சொந்த ஊரான திருக்குவளைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து காலை 8.30 மணிக்கு காரிலேயே திருக்குவளை புறப்பட்ட கருணாநிதியுடன் மனைவிதயாளு அம்மாள், மகன் ஸ்டாலின், பேரன் தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும் சென்றனர்.
அஞ்சுகம் அம்மையாரின் மறைவு தினமான நாளை திருவாரூரில் உள்ள அவரது நினைவிடத்தில் கருணாநிதிஅஞ்சலி செலுத்துவார். பின்னர் நாளையே அவர் சென்னை திரும்புவார் என திமுக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications