For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

14 கேட்கிறது காங்., 11 தான் என்கிறது திமுக!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியையும் சேர்த்து 14 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.ஆனால் 11 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பு கூறியுள்ளது. இதனால் தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. பாண்டிச்சேரி உள்பட 14தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கிறது. ஆனால் பாண்டிச்சேரியைத் தர முடியாது, 11 தொகுதிகள்தான்ஒதுக்க முடியும் என்று திமுக கூறி வருகிறது.

காலம் காலமாக பாண்டிச்சேரியில் போட்டியிட்டு வந்த நிலையில் சம்பந்தமே இல்லாமல், எந்தவித வெற்றிவாய்ப்பும் இல்லாத நிலையில், கட்சிக்கு அடிப்படை பலமே இல்லாத நிலையில் பா.ம.க. எப்படி இந்தத் தொகுதியில்போட்டியிடலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு தென்காசி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகர்கோவில், திருச்செந்தூர்,ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, வந்தவாசி, நீலகிரி, திருச்சி மற்றும் திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க திமுகமுன்வந்துள்ளது.

ஆனால் கூடுதலாக ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி, பாண்டிச்சேரி ஆகிய 3 தொகுதிகளைக் கேட்கிறது காங்கிரஸ்.ஆனால் இவற்றைத் தர முடியாத நிலையில் இருப்பதாக திமுக கூறுகிறது. இதனால் இழுபறி நீடிக்கிறது.

இதற்கிடையே, கேட்கும் தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர்நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பா.ஜ.க.வின் தோல்விதான் எங்களுக்கு முக்கியம். எனவே சிறு சிறுபிரச்சினைகளை பெரிதாக்க நாங்கள் விரும்பவில்லை. கடைசி வரை நம்பிக்கையுடன் இருப்போம் என்றுகாங்கிரஸ் தரப்பு கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X