சென்னை வான்வெளியில் பறவையுடன் மோதல்: அதிர்ஷ்டவசமாய் தப்பிய மொரீஷியஸ் விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மொரீஷியஸ் நாட்டு விமானம் இன்று தரையிறங்கும்போது, பறவைஒன்று அதன்மீது மோதியது.
எனினும் பெரிய அளவில் சேதம் எதுவுமின்றி அந்த விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. நேற்று நள்ளிரவு12.50க்கு இச் சம்பவம் நடந்தது. விமானத்தில் 154 பயணிகளும், விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
மும்பையிலிருந்து விமான தொழில்நுட்ப நிபுணர்கள் விரைந்து வந்து, பறவை மோதியதால் சேதமடைந்தஎன்ஜினை சரி செய்து வருகின்றனர். இதனால், திரும்பவும் அதிகாலை 2.05 மணியளவில் மொரீஷியசுக்குகிளம்பியிருக்க வேண்டிய அந்த விமானம் இன்னும் புறப்படவில்லை.
மொரீஷியஸ் செல்ல தயாராக விமான நிலையத்தில் காத்திருந்த 172 பயணிகளும் சென்னையில் உள்ளஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோளாறு சரி செய்யப்பட்ட பின் இன்றே அந்த விமானம் புறப்பட்டுவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications