சேலம் ஜல்லிக்கட்டில் காளை முட்டி தியாகி பலி
சேலம்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி என்ற கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், காளைகளை வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட தியாகி, காளை முட்டி பலியானார்.
சேலம், தம்மம்பட்டி கிராமத்தில், சில ஆண்டுகளாக, குடியரசு தினத்தன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதுவழக்கம். அதேபோல, நேற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டகாளைகள் இதில் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு காளைகளை அடக்கமுயற்சித்தனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்ட தியாகியான 75 வயதுமுத்துச்சாமி என்பவர் காளை முட்டி படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.இருப்பினும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் இந்த தியாகி.
குடியரசு தினத்தன்று நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி இறந்தது அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.