For Daily Alerts
Just In
10,000 மீனவர்களுக்கு உயிர் காக்கும் கவசங்கள்: ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழகம் முழுவதிலும் உள்ள 10,000 மீனவர்களுக்கு உயிர் காக்கும் மிதவைக் கவச உடைகள் (life savingjackets) அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுமரம், வல்லம் போன்றவற்றின் மூலம் கடலுக்குள்சென்று மீன் பிடிக்கும் 10,000 மீனவர்களுக்கு இந்த உயிர் காக்கும் கவசங்கள் அளிக்கப்படும். இதன் மூலம் கடலில்கஷ்டப்பட்டு மீன் பிடிக்கும் இவர்களுடைய உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
ஒரு உயிர் காக்கும் கவசத்தின் விலை ரூ. 1000 ஆகும். இதில் பயனாளி ரூ. 100 மட்டும் செலுத்தினால் போதும்,மீதமுள்ள ரூ. 900த்தை அரசே மானியமாக வழங்கும்.
ரூ. 1 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ. 90 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, January 27, 2004, 5:30 [IST]