சரவண பவன் ராஜகோபாலின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்து விட்டது.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு மற்றும் ஜீவஜோதியைக் கடத்தியதாக கூறப்படும்வழக்குகளில் ஆகியவற்றில் ராஜகோபால் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
சாந்தகுமார் கொலை வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 அரசுத் தரப்புசாட்சிகள் ராஜகோபாலுக்கு ஆதரவாக பல்டி அடித்துள்ளன. இதனால் வழக்கு விசாரணை பரபரப்பான கட்டத்தைஎட்டியுள்ளது.
இந் நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுஇன்று விசாரணைக்கு வந்தபோது, ராஜகோபாலை ஜாமீனில் விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்றுஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராஜகோபாலின் ஜாமீன் மனுவை நீதிபதி ஏ.கே.ராஜன் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications