பிரேசில் செயற்கோளை விண்ணில் செலுத்தும் இந்தியா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பிரேசில் நாட்டின் செயற்கைகோளை இந்திய ராக்கெட் விண்ணில் செலுத்தவுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், பிரேசில் நாட்டு வெளியுறவுத் துறைஅமைச்சர் செலியோ அமோரிமும் இன்று டெல்லியில் கையெழுத்திட்டனர். அப்போது பிரதமர் வாஜ்பாயும்,பிரேசில் அதிபர் லூயிஸ் இனாகியோ லூலா டா சில்வாவும் உடனிருந்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் வான்வெளி ஆராய்ச்சியில் இணைந்து செயலாற்றும். பிரேசில்செயற்கைக்கோளை ஏவுவதற்கும், செயற்கைக்கோளிலிருந்து வரும் தகவல்களை பெறுவதற்கு தரைவழிக்கட்டுப்பாட்டு நிலையம் அமைப்பதற்கும் இந்தியா உதவும்.
இத் தகவலை பெங்களூரில் இந்திய விணவெளி ஆராய்ச்சித் துறையான இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications