குமரி அருகே மாணவனை பீரோவில் வைத்துப் பூட்டிய வாத்தியார்!

Subscribe to Oneindia Tamil

திருவட்டார்:

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பரதப்பள்ளி கிராமத்தில், மாணவனை பீரோவில் வைத்துப்பூட்டிய ஆசிரியரை எதிர்த்து அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

திருவட்டார் அருகே உள்ள பூவன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஜெரின் (வயது 6)பரதப்பள்ளி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் முதலாவது வகுப்பில் படித்து வருகிறான்.

கடந்த 23ம் தேதி தனது வகுப்பில் படிக்கும் சிறுமியிடமிருந்து பென்சிலை எடுத்துள்ளான் ஜெரின். இது குறித்துஅந்த சிறுமி, ஆசிரியர் முத்தையன் என்பவரிடம் புகார் கொடுத்துள்ளாள். இதையடுத்து மாணவன் ஜெரினைக்கண்டித்த ஆசிரியர் முத்தையன், அவனை, பீரோவில் வைத்து பூட்டியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து பீரோவைத் திறந்தபோது, மாணவன் மயக்கமாகிக் கிடந்தான். பின்னர் அவனுக்குமயக்கம் தெளிவித்து வீட்டுக்கு அனுப்பினார் முத்தையன்.

வீட்டுக்கு வந்த ஜெரின் தனது பெற்றோரிடம் நடந்ததை அழுது கொண்டே கூறினான். அதிர்ச்சியடைந்தபெற்றோர், கிராமத்தாரிடம் விஷயத்தைக் கூறவே கிராமத்து மக்கள் கொந்தளித்தனர்.

குடியரசு தினமான நேற்று பள்ளியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஜெரினின் பெற்றோர்கள்மற்றும் கிராமத்து மக்கள் திரண்டு வந்து ஆசிரியர் முத்தையனை சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் போலீஸார் விரைந்து வந்து ஆசிரியரை மீட்டு கிராமத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+