For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனித்து போட்டியிட விடுதலை சிறுத்தைகள் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற தலித் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளைகூட்டணியிலிருந்து கழற்றி விட்டுள்ளது திமுக.

இதையடுத்து இரு கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கடந்த சில நாட்களாக தங்களுக்குள் ஆலோசித்து வருகின்றன.இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம்பேசுகையில், பா.ம.கவின் மிரட்டல் அரசியலுக்கு திமுக பலியாகி விட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகத்தை நிராகரித்ததன் மூலம் ஒட்டுமொத்த தலித் மக்களையே திமுகஅவமானப்படுத்தி விட்டது. இப்போதைக்கு எங்கள் முன் இரண்டே வழிகள்தான் உள்ளன.

ஒன்று, பா.ஜ.க.-அதிமுக கூட்டணி அமையாவிட்டால் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவது. அல்லது, காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்தால் அதில் இணைந்து போட்டியிடுவது. ஆனால் இவை இரண்டும் அமையுமாஎன்பதை யூகிக்க முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியையும் திமுக அவமானப்படுத்தி வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உரிய மரியாதை கிடைக்கவில்லை.எனவே அவை திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைய வேண்டும்.

இரு கூட்டணி வாய்ப்புகளும் அமையாவிட்டால், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் கட்சி போன்ற தலித் கட்சிகளுடன் இணைந்துபுதிய 3வது கூட்டணியை அமைப்போம். பிற சிறுபான்மைக் கட்சிகளையும் இந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்றார்திருமாவளவன்.

திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வீர்களா என்று திருமாவளவனிடம்செய்தியாளர்கள் கேட்டபோது, மக்கள் எனக்கு வாக்களித்து கொடுத்த பதவி அது, சின்னத்திற்குக் கிடைத்த வெற்றியல்ல என்றார்அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X