31ம் தேதி தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: மார்க். கம்யூ.
சென்னை:
திமுகவுடனான தொகுதிப் பங்கீடு வருகிற 31ம் தேதியன்று இறுதி செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் குழு உறுப்பினர்களுடன் இன்று வரதராஜன் 2வது கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுதொகுதிகள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் வரதராஜன் பேசுகையில், எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சுர்ஜித் சிங்க்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இடையே நடந்த முதல் கட்டப் பேச்சுவார்த்தைக்குப்பிறகு தற்போது 2வது கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம்.
இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது, தெளிவாக இருந்தது. எங்களது சில கோரிக்கைகளைபரிசீலிக்குமாறு திமுகவை கேட்டுக் கொண்டுள்ளோம். வருகிற 31ம் தேதி இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைநடைபெறும். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்துத் தெரிய வரும் என்றார் வரதராஜன்.
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.