பாம்பன் கடல் பாலத்தில் ரயில் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம், பாம்பன் கடல் பாலத்தில் இன்று பயணிகள் ரயில் என்ஜின் தடம்புரண்டது. ஓட்டுநரின்சமயோஜிதத்தால் பயணிகள் அனைவரும் பத்திரமாக தப்பினர்.
ராமேஸ்வரத்திலிருந்து இன்று காலை பாலக்காடு செல்லும் ரயில் கிளம்பியது. பாம்பன் கடல் பாலத்தில் ரயில்வந்தபோது, ரயிலின் என்ஜின், தண்டவாளத்தை விட்டு இறங்கியது.
இதைக் கவனித்து விட்ட ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தி விட்டார். இதனால் பெரும் விபத்துதவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு மண்டபம் ரயில் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு வேறு ரயிலில் பாலக்காடு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தடம்புரண்ட என்ஜினை மீட்கும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது. என்ஜின் தடம் புரண்டதற்கான காரணம்தெரியவில்லை.












Click it and Unblock the Notifications