"மக்கள் தலைவன்" மெளனம், அரசியல் கட்சிகள் குழப்பம்!
பாண்டிச்சேரி:
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள புதுவை கண்ணன், தொடர்ந்து எந்த முடிவையும் அறிவிக்காமல்அமைதியாக இருந்து வருவதால், புதுவை அரசியல் கட்சிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது.
புதுவை மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்ற தலைவரான ப.கண்ணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியபின்னர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பாண்டிச்சேரி சட்டசபைதொகுதி வாரியாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்கிறார்.
கண்ணன் ஆதரவு அமைச்சர்களான லட்சுமி நாராயணன், ஏழுமலை உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்களும் கண்ணனுக்குஆதரவாக உள்ளனர். ஆனால் இரு அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்பதுஇதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
கண்ணன் வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருப்பதால், அடுத்து அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரியாமல் புதுவை அரசியல்கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.