மதிமுகவுக்கு நான்கே தொகுதிகள் தான்: திமுக திட்டவட்டம்
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குழுத் தலைவர் ஆற்காடு வீராசாமியுடன் மதிமுக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமையில், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், நாசரேத்துரை ஆகியோர் அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பின் ஆற்காடுவீராசாமியை சந்தித்தனர்.
அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் பாலு, முன்னாள் மாநில அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும் உடனிருந்தனர்.
இச் சந்திப்பின்போது தங்களுக்கு குறைந்தபட்சம் 5 தொகுதிகளாவது வேண்டும் என மதிமுகவினர்வலியுறுத்தியதாகத் தெரிகிறது. கடந்த முறை போட்டியிட்ட சிவகாசி, பொள்ளாச்சி, பழனி, திண்டிவனம்,திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளைத் திரும்பத் தருமாறு கோரினர். முடிந்தால் கூடுதலாக வந்தவாசிதொகுதியையும் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால், திண்டிவனம் தவிர்த்த மற்ற 4 தொகுதிகளை மட்டுமே தர இயலும் என திமுக தலைவர்கள்தெரிவித்துவிட்டனர். இன்று மதிமுகவினர் மீண்டும் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்துவார்கள் என்றுதெரிகிறது. இதைத் தொடர்ந்து மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளின் விவரம் வெளியிடப்படலாம்.