சாலை விபத்தில் ஏ.கே.மூர்த்தி உயிர் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
திருப்போரூர்:
முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி சாலை விபத்தில் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
சென்னை அருகே திருப்போரூர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. திருப்போரூரில் ரூ. 20 லட்சம்மதிப்பிலான நலப் பணிகளை தொடங்கி வைக்க சென்று கொண்டிருந்தார் ஏ.கே.மூர்த்தி. அப்போது அவரதுகாருடன், எதிரே வந்த ஒரு ஜீப் மோதியது.
இதில் மூர்த்தி, அவருடன் பயணம் செய்த செங்கல்பட்டு எம்.எல்.ஏ. ஆறுமுகம் ஆகியோர் லேசான காயங்களுடன்உயிர் தப்பினர். விபத்தில் மூர்த்தி பயணம் செய்த கார் சேதமடைந்தது.
பின்னர் வேறொரு காரில் மூர்த்தியும், செங்கை எம்.எல்.ஏவும் மருத்துதுவமனைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications