For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.- வெங்கையா சந்திப்பு: அதிமுக-பா.ஜ.க. கூட்டணி உருவானது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே இன்று கூட்டணி உருவானது.

இன்று முதல்வர் ஜெயலலிதாவை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்துப் பேசியதையடுத்து கூட்டணிஉறுதியானது.

இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது. போயஸ் கார்டன் வாசலில்வெங்கைய்யா நாயுடுவை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றுஉள்ளே அழைத்துச் சென்றனர்.

சுமார் 45 நிமிடங்கள் நடந்த இச் சந்திப்பின்போது ஜெயலலிதாவின் நண்பரும், வில்லன் நடிகர் நம்பியாரின்மகனும், பா.ஜ.க. தேசியக் கவுன்சில் உறுப்பினருமான சுகுமாறன் நம்பியாரும் உடனிருந்தார்.

கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன் பிரதமர் வாஜ்பாயின் அரசை கவிழ்த்தார் ஜெயலலிதா. இந் நிலையில் மீண்டும்இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உருவாகியுள்ளது.

வாஜ்பாயை பிரதமராக ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என பா.ஜ.க. அறிவித்ததால், கூட்டணி சேருவதைஜெயலலிதா ஆரம்பத்தில் தவிர்த்து வந்தார். இந் நிலையில் அவருடன் துணைப் பிரதமர் அத்வானி இரண்டு முறைதொலைபேசியில் பேசினார். பா.ஜ.க. முக்கியஸ்தர் சுகுமாறன் நம்பியாரும் ஜெயலலிதாவை சந்தித்தார்.

அப்போது ஜெயலலிதா வைத்த நிபந்தனைகளை பா.ஜ.க. தலைமையிடம் நம்பியார் தெரிவித்தார். இந்தநிபந்தனைகளை ஏற்க பா.ஜ.க. முன் வந்ததையடுத்து கூட்டணி உருவாகியுள்ளது.

இன்று ஜெயலலிதாவை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய நாயுடு, தேசிய அளவிலான அரசியல் நிலைமைகுறித்து ஜெயலலிதாவுடன் பேசவே நான் இங்கு வந்தேன். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.போட்டியிடும். எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பதுகுறித்து அதிமுகவும் மாநில பா.ஜ.க. நிர்வாகிகளும் பேசி முடிவு செய்வார்கள் என்றார்.

வாஜ்பாய் பிரதமராக வருவதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். இருவரும் இணைந்து பிராச்சாரம் செய்வது பற்றிபின்னர் முடிவு செய்யப்படும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போல் ஜெயலலிதா வெளியில் இருந்துஎங்களுக்கு ஆதரவு அளிப்பார் .

எங்கள் கூட்டணிக்கு பிரதம வேட்பாளர் என்பதை தெளிவாக முன்னிறுத்தி உள்ளோம். காங்கிரஸ் கூட்டணிஅவ்வாறு அறிவிக்காதது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது என்றார்.

நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், நாயுடுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிக திருப்திகரமாக இருந்தது.நாடாளுமன்றத் தேர்தலை பாரதீய ஜனதாக் கட்சியும், அதிமுகவும் இணைந்து சந்திப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இரு கட்சிகளின் சார்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைநடத்தப்படும் என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சேருமா என்று கேட்டபோது, அதற்கு நேரடியாக பதில் தர மறுத்தஜெயலலிதா, நான் உங்களிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லிவிட்டேன் என்று பதிலளித்தார்.

நாயுடு கூறுகையில், இப்போது ஏற்பட்டுள்ள இந்தக் கூட்டணி எதிர்காலத்திலும் இணைந்து செயல்படும் என்றார்.

அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இணைந்துள்ளதைத் தொடர்ந்து தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. பா.ஜ.கவுக்கு 6 அல்லது 7 தொகுதிகளை அதிமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் பா.ஜ.க. 10 தொகுதிகளை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X