யார் வேண்டுமானாலும் கட்சியில் சேரலாம்: பாண்டி. பா.ஜ.க.
பாண்டிச்சேரி:
பாரதீய ஜனதாக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என்று பாண்டிச்சேரி பாரதீய ஜனதாக் கட்சிகூறியுள்ளது.
பாண்டிச்சேரியின் முக்கிய அரசியல் புள்ளியான கண்ணன் திடீரென்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.அவர் பா.ஜ.க.வில் சேர்ந்து, அதிமுக ஆதரவுடன் பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பாண்டிச்சேரி பிரதேச பா.ஜ.க. தலைவர் கேசவலு செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாயியின்தலைமையை ஏற்கும் யாரும் பா.ஜ.கவில் சேரலாம். எங்களது கட்சியில் சேருவதற்கு பலரும் தயாராகிவருகிறார்கள். பாண்டியில் பா.ஜ.க. புது பலத்துடன் உள்ளது.
கண்ணன் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும்.எங்களது தொண்டர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியாக சென்றுஅவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications