பிரியங்காவை களமிறக்க சோனியா முடிவு?
டெல்லி:
மக்களவைத் தேர்தலில் தனது மகள் பிரியங்காவை களத்தில் இறக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
சோனியா வெளிநாட்டவர் என்று பா.ஜ.கவினர் பிராச்சாரம் செய்து வருகின்றனர். அதை முறியடிக்க பிரியங்காவை தேர்தலில் போட்டியிடச் செய்ய சோனியா முடிவு எடுத்துள்ளதாகவும், தொகுதி எது என்று தீர்மானிக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியைப் போல பிரியங்காவும் உத்திரப்பிரதேசத்தில் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸில் ஒரு தரப்பினர் விரும்புகின்றனர். அதேநேரத்தில் அவரை பெல்லாரித் தொகுதியில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா சோனியாவை வற்புறுத்தி வருகிறார்.
ஆனால், உத்திரப்பிரதேச காங்கிரஸார், மறைந்த பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்ட லேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications