ஸ்ரீரங்கம் விபத்து: மேலும் 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கல்யாண மண்டப தீ விபத்து தொடர்பாக மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் நடந்த பெரும் தீ விபத்தில் மணமகன் குருராஜன்உள்ளிட்ட 60 பேர் பரிதாபமாக இறந்தனர். மணமகள் ஜெயஸ்ரீ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பந்தல்காரர் செல்வம் உள்பட 4 பேரை போலீஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.இன்று திருமண மண்டப உரிமையாளர் ராமசாமி, வீடியோகிராபர் தர்மராஜன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். தர்மராஜன் ஏற்கனவே தீக்காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட ராமசாமி தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே போலீஸார் அவரை மருத்துவமனையில்அனுமதித்தனர்.












Click it and Unblock the Notifications