டிஸ்மிஸ் ஆன 11 ஆசிரியர்கள் தீர்ப்பாயத்தில் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
3 நீதிபதிகள் குழுவால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர்களில் 11 பேர் இன்று சென்னை உயர் நீதிமன்றவளாகத்தில் உள்ள நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து டிஸ்மிஸ் ஆனவர்கள் வழக்கை விசாரிக்கநியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் குழு 999 பேரை டிஸ்மிஸ் செய்தது. இவர்கள் அனைவரும் தற்போது படிப்படியாகமேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து டிஸ்மிஸ் உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெற்றுள்ளனர்.
இந் நிலையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட 11 ஆசிரியர்கள்இன்று நிர்வாக தீர்ப்பாய நீதிபதி டேவிட் கிறிஸ்டியன் முன்பு மேல் றையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.












Click it and Unblock the Notifications