சென்னைக்கு மதுராந்தம் ஏரி தண்ணீர் கிடையாது
சென்னை:
சென்னைக்கு தண்ணீர் வழங்கும் அளவுக்கு மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் இல்லை என்று நிபுணர்கள் குழுதெரிவித்துள்ளது.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை மாநகர குடிநீர் வாரியம் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக மதுராந்தகம் ஏரியிலிருந்து லாரிகள் மூலம்தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மதுராந்தகம் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுராந்தகம் ஏரி மூலம் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயத்திற்குப் போக சென்னைக்குவழங்க உபரி நீர் உள்ளதா என்பதை ஆராய 4 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்றை காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் வெங்கடேசன் நியமித்தார்.
இக் குழுவினர் ஏரியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின்கருத்துக்களைக் கேட்டனர். இறுதியில் தங்கள் ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
அதில், மதுராந்தகம் ஏரியில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை. 609 அடி கொள்ளளவு உள்ள ஏரியில்இப்போது 220 அடியளவே நீர் உள்ளது. இந்த நீர் மதுராந்தகம் பகுதி விவசாயத்திற்கே போதுமானதாக இருக்காது.எனவே சென்னைக்கு குடிநீர் வழங்க சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications