சென்னை மாநகராட்சி: காங். கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக் கவுன்சிலர்கள் குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சென்னை மாநகராட்சி அவைக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு குறித்தும், திமுக- காங்கிரஸ் தேர்தல் கூட்டணி குறித்தும் வாய்க்கு வந்தபடி பேசினார்.
இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். துணை மேயரை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்துஅவர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு கராத்தே உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ உள்ளிட்ட 8 கவுன்சிலர்களும் குண்டுக்கட்டாக அவையில்இருந்து தூக்கிச் செல்லப்பட்டு, வெளியேற்றப்பட்டார்கள்.
இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் தலைவர் சி.வி.மலையன் தலைமையில் வெளிநடப்புச் செய்வதாகக் கூறி வெளியேறினர்.இதனால் அவையின் கூட்டம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications