ஜெயந்தி நடராஜனுக்கு புது பொறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலுக்கான, கர்நாடகம் மற்றும் கேரள மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக முன்னாள்மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் சோனியா காந்தி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கர்நாடகம் மற்றும் கேரளமாநில நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செய்திகளை வெளியிடும் பொறுப்பு ஜெயந்தியிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாசனின் ஆதரவாளரான ஜெயந்தி நடராஜனுக்கு தேசிய அளவில் பதவி வாங்கித் தரும் முயற்சிகள் நடந்தன.இதை இளங்கோவன் கோஷ்டி எதிர்த்து வந்தது. ஜெயந்திக்கு மக்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடவும்வாய்ப்பு பெற்றுத் தர வாசன் முயன்றார்.
ஆனால், அவரை செய்தித் தொடர்பாளராக்கிவிட்டதன் மூலம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படுவதுகுறைந்து போய்விட்டது.












Click it and Unblock the Notifications