பாண்டி. தொகுதி சிக்கல் நீடிக்கிறது: கமல்நாத் கருத்து
சென்னை:
பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி தொடர்பாக சிக்கல் நிலவுவதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமல்நாத் கூறியுள்ளார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில் கமல்நாத்தும் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரி தொகுதி தொடர்பாக கூட்டணியில் சிக்கல்நீடிக்கிறது. இருப்பினும் இது சாதாரண விஷயம்தான். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.
பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவானவிவாதம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுடனும் இது குறித்து பேசுவோம். கூட்டணிக் கட்சிகள்ஒவ்வொருவருடைய பலத்தையும் மதிக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.
தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி வெல்லும். கருணாநிதியைமீண்டும் சந்திக்கும் எண்ணம் இல்லை. திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு வலுவாகவே உள்ளது. திமுக தலைவர்கருணாநிதியும் எங்கள் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்துப் பேசுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்என்றார் அவர்.