காமத்திற்கும் கண் இல்லை: 45ஐ கற்பழிக்க முயற்சித்த 19
சாயல்முடி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எம்.கரிசல்குளம் கிராமத்தில், 45 வயதுப் பெண்ணைக்கற்பழிக்க முயன்றதாக 19 வயது இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
எம்.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராத்தாயி அம்மாள். இவருக்கு வயது 45. இவர் வயல் வேலையில்ஈடுபட்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துமாரி என்ற 19 வயது இளைஞர், ராத்தாயி அம்மாளைகற்பழிக்க முயற்சி செய்தார்.
அதிர்ச்சியடைந்த ராத்தாயி அம்மாள் சப்தம் போட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முத்துமாரி அங்கிருந்து ஓடிவிட்டார். முத்துமாரியின் செயல் குறித்து ராத்தாயி அம்மாள் சாயல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீஸார் ராத்தாயி அம்மாள் வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை யாரிடம் சொல்லக் கூடாது என்றுமிரட்டியதற்காக முத்துமாரியின் தந்தை, அண்ணன் மகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 3 பேரும்தற்போது தலைமறைவாகி விட்டனர்.
45 வயதுப் பெண்மணியை 19 வயது வாலிபர் கற்பழிக்க முயன்றது சாயல்குடி வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications