மதுரையில் போட்டியிடுவேன்: சு.சுவாமி
மதுரை:
தமிழகத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளில் எங்களுக்கு மிகப் பெரிய ஓட்டு வங்கி உள்ளது. இருப்பினும்மதுரையில் மட்டும் போட்டியிட முடிவு செய்துள்ளேன். மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவளிக்கப்போகிறோம் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், தமிழகத்தில் மதுரை, பெரியகுளம், திருநெல்வேலி,சிவகங்கை, தென் சென்னை, சிவகாசி உள்ளிட்ட 8 தொகுதிகளில் எங்களுக்கு மிகப் பெரிய ஓட்டு வங்கி உள்ளது.ஆனால் இதில் மதுரையில் மட்டும் போட்டியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். நானே மதுரையில் போட்டியிடஉள்ளேன்.
எங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் அதிமுகவை ஆதரிப்போம். எங்கள் கட்சியினர்அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வர், வாக்களிப்பர்.
மதுரை எம்.பி. தொகுதியில் எங்களது கட்சியின் வேட்பாளர் யார் என்பதை வருகிற பிப்ரவரி 3ம் தேதி டெல்லியில்நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்போம்.
திமுக தலைமையில் தமிழகத்தில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. காங்கிரஸ்கட்சிக்குத் தலைவர் யார் என்றே தெரியவில்லை என்றார் அவர்.