கருணாநிதி மீதான டெஸ்மா வழக்கு தள்ளிவைப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட டெஸ்மா வழக்கு விசாரணை மார்ச்1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை தூண்டி விட்டதாகக் கூறி கருணாநிதி மீது டெஸ்மா சட்டத்தின்கீழ் தமிழக அரசு சென்னை எழும்பூர் கூடுதல் மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருணாநிதி ஆஜராகவில்லை. அதற்குப் பதில் கருணாநிதி சார்பில்ஆஜரான அவரது வக்கீல், இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க கோரினார். இதை ஏற்ற நீதிபதி மார்ச் 1ம்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தார்.
இதேபோல கருணாநிதியின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இன்னொரு மனுவில், முதல் மாடியில் உள்ள கூடுதல்மெட்ரோபாலிடன் நீதிமன்றத்திலிருந்து தரைத் தளத்தில் உள்ள வேறு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை மாற்றவேண்டும். அப்போதுதான் வழக்கு விசாரணையின்போது தன்னால் ஆஜராக வசதியாக இருக்கும் என்றுகருணாநிதி கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என்றுஅறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications