For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.15.4 கோடி செலவில் மீனவர்களுக்கு இலவச வீடுகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மீனவர்களுக்கு ரூ.15.4 கோடி மதிப்பில் 4,000 வீடுகளை இலவசமாக கட்டித் தர முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மீனவர்கள் தங்கள் குடும்பங்களோடு மன நிறைவுடன் வசித்திட இருப்பிட வசதி செய்து தரும் நோக்கத்துடன்,மொத்தம் 4,000 வீடுகளை ரூ. 15.4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டித் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த வீடுகள்மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேரடிக் கண்காணிப்பில், ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கட்டித் தரப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக நேர்காணல் நாளை நிறைவு:

மாவட்டவாரியாக அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஜெயலலிதா நடத்தி வந்த நேர்காணல் நிகழ்ச்சி நாளையுடன்முடிவடைகிறது. கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் இந் நிகழ்ச்சிதொடங்கியது.

இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்துள்ளார். நாளைநெல்லை மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்புடன் நேர்காணல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் 3ம் தேதிஅதிமுக செயற்குழு கூடுகிறது. அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு வீரமணி எதிர்ப்பு

அதிமுக பா.ஜ.கவுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்புதெரிவித்துள்ளார். மதச்சார்பற்று செயல்பட வேண்டும் என்ற பெரியார் கொள்கையின்படி, வரும் மக்களவைத்தேர்தலில் அதிமுக-பா.ஜ.க கூட்டணியை திராவிடர் கழகம் ஆதரிக்காது. யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதைகழக பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X