பா.ஜ.க.வில் கண்ணன்?: இல.கணேசன் பேட்டி
சென்னை:
புதுவை காங்கிரஸிலிருந்து விலகியுள்ள ப.கண்ணன் பாரதீய ஜனதாக் கட்சியில் சேருவதற்கான சூழ்நிலை தற்போதுஇல்லை என்று அகில இந்திய பா.ஜ.க.செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கண்ணன், பா.ஜ.க.வில் சேருவதற்கான அரசியல்சூழ்நிலை இப்போது புதுவையில் ஏற்படவில்லை. அங்கு நிலைமை இன்னும் குழப்பமாகவே உள்ளது.
இருப்பினும்,யார் வேண்டுமானாலும் பா.ஜ.க.வில் சேரலாம். வாஜ்பாய் தலைமையை ஏற்கும் யாரையும் நாங்கள்வரவேற்போம்.
அதிமுக தேர்தல் குழுவுடன் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் பா.ஜ.க. தேர்தல் குழுவினர் சந்தித்து தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசுவார்கள். எத்தனை தொகுதிகளில் நாங்கள் போட்டியிடப்போகிறோம் என்பதை இப்போதுகூறுவதற்கில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகதான் எங்களது கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. எனவே இந்தக்கூட்டணியில் சேர விரும்பும் சிறு கட்சிகள், எங்களை அணுகுவதற்குப் பதில் அதிமுகவைத்தான் அணுக வேண்டும்என்றார்.












Click it and Unblock the Notifications